தமிழகத்தில் தேசிய சிந்தனையை வலுப்படுத்துவோம்!
தமிழகத்தில் தேசிய, தெய்வீக சிந்தனைகளை வலுப்படுத்திடவும், அதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து செயல்படும் செயல்வீரர்களை உருவாக்கிடவும், அவர்களுக்கு உத்வேகமும், உற்சாகமும் ஊட்டி தமது பகுதிகளில் தேசியப் பணிகளாற்றிடவும், மாநில அளவிலான ஒரு நாள் செயல்வீரர் பயிற்சி முகாமினை தேசிய சிந்தனைக் கழகம் நடத்த உள்ளது.
இம்முகாமில் அகில இந்திய அமைப்பாளர் திரு.ஜெ.நந்தகுமார் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் வழிகாட்ட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு, தாய்நாட்டுக்குப் பணியில் இணைந்து செயல்பட அன்புடன் அழைக்கிறோம்.
கலந்துகொள்ளத் தகுதி:
- கலை, இலக்கியம், எழுத்து, கல்வி ஆராய்ச்சி, பத்திரிகைத் துறைகளில் ஈடுபாடு.
- வயது 20 முதல் 50-க்குள் இருக்க வேண்டும்.
- தேசிய, தெய்வீக சிந்தனைகளில் நம்பிக்கைக் கொண்டவராக இருத்தல் நலம்.
முகாம் குறித்த விவரங்கள்:
- நாள்: விளம்பி வருஷம், ஆனித் திங்கள், 10-ஆம் நாள் (24.06.2018), ஞாயிற்றுக்கிழமை.
- 23-ஆம் தேதி சனிக்கிழமை இரவு 00 மணிக்குள் வர வேண்டும். இரவு உணவு ஏற்பாடு உண்டு. 24-ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு முகாம் நிறைவுறும்.
- இடம்: விவேகானந்த வித்யாலயா பள்ளி, கே.செட்டிபாளையம், திருப்பூர்
- பதிவு செய்ய கடைசி தேதி: ஜூன் 16-ஆம் தேதி.
மேலும் விவரங்களுக்கு:
ம.கொ.சி.இராஜேந்திரன்,
தேசிய சிந்தனைக் கழகம், சென்னை-31
அலைபேசி எண்: 90031-40968.
மின்னஞ்சல் முகவரி: makochidck@gmail.com